வாங்கினால் கொடாதோர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:30.
30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.
கிறித்துவில் வாழ்வு:
வாங்கினால் கொடாத வஞ்சகரே
வர்த்தகர் வடிவில் வருகின்றார்.
தூங்கினார் இறைவன் எனக்கூறி,
துன்பம் மட்டுமே தருகின்றார்.
ஏங்குவார் ஏழையர் என எண்ணி,
எடுத்துக் கொடுப்பதே நம் கடமை;
தாங்குவார் இறைவன் நம்மையுமே;
தரணியில் யாவும் அவருடமை!
ஆமென்.
![Image may contain: 5 people, people smiling, text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x296/46507436_2090778910952900_1721879979836309504_n.jpg?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=5a8390b9be12de6c3c1233d213b6bae5&oe=5C7CB67F)