வாக்கில் வல்லமை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா4:31-32.
31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார்.
32 அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
யாழின் நரம்பு முறுக்கானால்,
இன்னிசை, பாடல் நாக்கில் வரும்.
வாழ்வில் நேர்மை உருக்கானால்,
வாய்மை, வல்லமை வாக்கில் வரும்.
தூளின் எழுச்சி இரைவதுபோல்
தோன்றி மறையும் நம்வாக்கால்,
தாழும் மதிப்பை நாம் புரிந்து,
தவற்றை விடுவோம், வாழ்வுவரும்!
ஆமென்.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/42045139_2008815225815936_7967803450983448576_n.jpg?_nc_cat=0&_nc_eui2=AeF7uT-uVtoB7HrLbE5J0WBd4CyW0EOQOI5ykdZgc1Zb_Q0kdvFt4VGP6WlCpcu7s7TGyQgGtWYC8enroZeMVQZ0Hg2g-4YVG1wfFLWPlWAqIg&oh=1b258a9c1cd892370575fb3e4b6b9ac7&oe=5C275B1E)