வந்திடும் விளைவு அறியார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:41-44.
41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது,
42 உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.
43 உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
44 உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
சந்திக்கும் காலம் அறியாமல்,
சட்டென வீழ்ந்தோர் பலருண்டு.
முந்தி நாம் சொல்லியும் ஏற்காமல்,
முடிந்து போனோர் சிலருண்டு.
வந்திடும் விளைவு எண்ணாமல்,
வாழ்ந்தால் என்ன விலையுண்டு?
எந்திரம் என்றெனப் பணியாமல்,
இறை அறிவோம், நலமுண்டு!
ஆமென்.