லேவியும், பாவியும்!

லேவியும், பாவியும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:27-28.
27 இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.
28 அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.

கிறித்துவில் வாழ்வு:
ஆயத்துறையின் வருவாய் விட்டு,
அடைந்த சொத்தையும் துறந்து விட்டு,
மாயம் என்று யாவையும் விட்டு,
மைந்தனுக்காகவே வருகிறார், லேவி!
சாயம் பூசி ஊழியம் செய்து,
சாதிப்பதுவாய் விளம்பரம் செய்து,
வாயில் மட்டுமே நன்மை செய்து,
வாழ்வையே இழக்கிறார், பாவி!
ஆமென்.

Leave a Reply