யூதரின் தவறான எண்ணமும் செயலும்!

a_bucketful_of_zionism_2_638.jpg

யூதரின் தவறான எண்ணமும் செயலும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:28-30.
28 ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,
29 எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள்.
30 அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்.

கிறித்துவில் வாழ்வு:
இறைவனின் மக்கள் ஒரு சிலர்தானோ?
இப்படி எண்ணுதல் நேர்மைதானோ?
முறைப்படி தந்தை ஒருவனுக்கென்றால்,
மூத்தவன் யூதன் தவறினான் அன்றோ?
உரைத்திடும் மீட்பை உலகம் அறிய,
ஓரினம் முதலில் தேர்வானாலும்,
நிறைத்திடும் அருளால் யாவரும் இன்று,
நேர்மை இறையின் மக்கள் அன்றோ?
ஆமென்.

Leave a Reply