யாரைத் தேர்வு செய்வார்?
நற்செய்தி மாலை: மாற்கு 15:6-8.
“விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு. பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது.”
நற்செய்தி மலர்:
நல்லார் கெட்டார் என்றிருவர்
நடக்கும் தேர்தலில் போட்டியிட்டால்,
எல்லா வாக்கும் பெற்றவராய்,
ஏய்க்கும் கெட்டவர் வென்றிடுவார்!
இல்லா நேர்மை இவ்வுலகில்,
இறைமகன் இயேசுவே நின்றாலும்,
பொல்லார் வாக்கு தரமாட்டார்;
புனிதரைத்தான் கொன்றிடுவார்!
ஆமென்.