யாரென நினைக்கிறார்?

என்னை யார் என்று நினைக்கிறார்கள்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:18-19.

18 பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
அவரவர் கோணத்தில் பார்த்துவிட்டு,
அதுவே சரியெனப் பேசுகின்றோம்.
சுவரென யானையைத் தடவிவிட்டுச்
சொல்லால் வண்ணம் பூசுகின்றோம். 
தவறுகள் எவையென அறிவதற்குத்
தந்தையின் பார்வை பெற்றிடுவோம்.
எவரது கருத்து உண்மையென்று,
இறைவாக்கால் நாம் கற்றிடுவோம்!
ஆமென்.

Leave a Reply