யாருக்கும் தெரியாததா?

யாருக்கும் தெரியாததும்…கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:2-3.

2வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
3ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.

கிறித்துவில் வாழ்வு:
யாருக்கும் தெரியா எண்ணமும்கூட,
இறையால் இன்று வெளிப்படுமே.
பேருக்குத் தூயோனாக இருந்தால்,
பிழைகள் பெருகிப் பழித்திடுமே.
தாருக்கும் வேண்டும் நறுமணமென்று 
தரைச் செடி யாவும் அறிந்திடுமே.
ஊருக்கு நல்லவன் பட்டம் அல்ல;
உள்ளில் உண்மை தெரிந்திடுமே!
ஆமென்.

Leave a Reply