யாருக்காக அழுகிறோம்?

யாருக்காக அழுகிறோம்?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:27-28.

27 திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.28 இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.

கிறித்துவில் வாழ்வு:

ஆண்டவருக்காய் அழவும் வேண்டாம்;

அவருக்காக அடிக்கவும் வேண்டாம்.

வேண்டற்பெயரில் திட்டவும் வேண்டாம்.

வீதியிலதனைக் கொட்டவும் வேண்டாம்.

மாண்டவரெழும்ப வேண்ட வேண்டும்.

மன்னிக்கின்ற நெஞ்சால் வேண்டும்.

தோண்டத்தோண்ட உருக வேண்டும்.

தூய்மையால்தான் திறக்க வேண்டும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply