முழங்கால் முடக்கி வாழ்த்துகிறார்!

Image may contain: one or more people, people standing and outdoor

முழங்கால் முடக்கி வாழ்த்துகிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:14-15.
14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
15 அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.

கிறித்துவில் வாழ்வு:
பெருந்தொகை வருவாய் வருமேயென்றால்,
பெரியரும், சிறியரும் முன்வருவார்.
இருப்பதை இழக்கும் இறைப்பணியென்றால்,
யார்தான் இயேசு பின்வருவார்?
திருப்பணிக்கென்றே தெய்வ மகனார்,
திக்குகள் எட்டும் நடக்கின்றார்.
அருட்பலி காணும் அந்த நாட்டார்,
அவர்முன் கால்களை முடக்கின்றார்!
ஆமென்.

Leave a Reply