முள்ளுடன் வளர்ந்த செடிகள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:14.
14 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
கொள்ளும் கவலை ஒருபக்கம்,
கோடிகள் தேடல் மறுபக்கம்;
அள்ளும் இன்பத்தால் நெருக்கம்.
அவர்கள் வளர்வது எப்பக்கம்?
தெள்ளத் தெளிவாய் தெரிந்திடுவோம்;
தெய்வ வாக்கைப் புரிந்திடுவோம்.
உள்ளும் புறமும் வளர்வதற்கு,
ஒவ்வாப் பண்புகள் உரிந்திடுவோம்!
ஆமென்.
![Image may contain: plant, tree, outdoor and nature](https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-0/p235x350/51133896_2180135935350530_1981977946537066496_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent-maa2-1.xx&oh=37fd207721c686eef0ca609607af8ef8&oe=5CC6D8A4)