முடியாதெனத் தடுக்கும் மலை

முடியாதெனத் தடுக்கும் மலையை…..
நற்செய்தி மாலை: மாற்கு 6: 50-52.
“ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ‘ துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் ‘ என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள். ஏனெனில் அப்பங்கள்பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.”

நற்செய்தி மலர்:
அடியார் என்றே நாமிருந்தாலும்,
அடிக்கடி மறந்து அஞ்சுகிறோம்.
இடியாய்த் துன்பம் எதிர்க்கும் நாளில்,
இடிந்து போய் நாம் கெஞ்சுகிறோம்!
துடியாய்த் துடிப்பதை நிறுத்திவிட்டு,
தெய்வம் சொல்வதைக் கேட்டிடுவோம்.
முடியாதெனத் தடுக்கும் மலையை,
மும்மை இறையால் ஓட்டிடுவோம்!
ஆமென்.

Gershom Chelliah's photo.
LikeShow More Reactions

Comment

Leave a Reply