மறக்காதீர்! இறக்காதீர்!
மார்வாடி செட்டியர் வர்த்தகம்போல்,
மக்கள் ஆட்சி நடக்குமெனில்,
ஏர்வாடி மனநலக் காப்பகங்கள்,
இங்கே பெருகும்; மறக்காதீர்!
போராடி அழுவோர் உரிமைகளைப்
புரியும் அரசு இருக்குமெனில்,
சீராடி உயரும் நம் வாழ்வு;
சிறியரைத் தாழ இறக்காதீர்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 1 person, standing](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/q84/p235x350/39395275_1968314759865983_1441459086884339712_n.jpg?_nc_cat=0&oh=2ad2df2a78fc8f35b60b5425e09f3b2c&oe=5BF7CC17)