மனந்திரும்புங்கள்! கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:31-32; |
31தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கப் பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். |
32யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். கிறித்துவில் வாழ்வு: அறிவின் முதிர்ச்சி எங்கே தெரியும்? அனைவரை மீட்கும் நேர்மையிலே. குறுகிய அறிவு எங்கே சரியும்? கொடுமையைப் புகழும் பார்வையிலே. வெறியும் வெறுப்பும் எங்கே முடியும்? விரும்பா அழிவில் தோற்பதிலே. நெறியும் வாழ்வும் எங்கே தொடங்கும்? நேர்மை இயேசுவை ஏற்பதிலே! ஆமென். |