மனந்திரும்புங்கள்!

மனந்திரும்புங்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:31-32;
31தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கப் பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
32யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அறிவின் முதிர்ச்சி எங்கே தெரியும்?
அனைவரை மீட்கும் நேர்மையிலே.
குறுகிய அறிவு எங்கே சரியும்?
கொடுமையைப் புகழும் பார்வையிலே.
வெறியும் வெறுப்பும் எங்கே முடியும்?
விரும்பா அழிவில் தோற்பதிலே.
நெறியும் வாழ்வும் எங்கே தொடங்கும்?
நேர்மை இயேசுவை ஏற்பதிலே!
ஆமென்.

Leave a Reply