மண்ணரசு ஆணை மதிப்பவர் யார்?

அரசு ஆணையை மதிப்பவர் யார்?

இறைவாக்கு: லூக்கா 2:1-5.
1 அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2 சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
3 அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
4 அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

இறைவாழ்வு:

கண்மணி மனைவி கருவுற்றிருந்தும்,
கடக்கும் பாதை உருவற்றிருந்தும்,
எண்பது கற்கள் தொலைவு இருந்தும்,
யோசேப்படியார் கீழ்ப்படிந்தார்.
விண்வெளிக் கோள அறிவு இருந்தும்,
விரைந்து செல்லும் வசதி இருந்தும்,
மண்ணரசாணை தெரிந்திருந்தும்,
மாக்கள் இன்று கீழ்ப்படியார்!
ஆமென்.

Image may contain: 5 people, people smiling, people sitting
LikeShow More Reactions

Comment

Leave a Reply