மணத்தின் அருமை பிணத்தில் தெரியும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:3-5.
3 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமேதவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி,
4 தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
5 மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
உணவின்றி வாடும் ஏழையைக் கண்டும்,
உதவாதிருத்தல் பெருங்கேடு.
பணம் பொருள் நிறைந்த வீடானாலும்,
பசியாற்றலையேல் சுடுகாடு.
குணம் என்று சொன்னால் கிறித்து போலாம்,
கொடுப்பதின் இன்பம் நீ தேடு.
மணத்தின் அருமை, பிணத்தில் தெரியும்!
மகனே, மகளே, இரங்கிவிடு!
ஆமென்.
![Image may contain: 1 person, sitting and text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/q81/s526x296/45103322_2065494370148021_4536262617433374720_n.jpg?_nc_cat=101&_nc_eui2=AeH6DBEOsKMJC8vo636l85WmUYJL9Aw59vw2KQNOR6IpQy97XdGUT09jC5WY4yPi8HZnzJdIN41NPFp6nSe0a_wYRtoJVRytO9KUQ9ZjJmKXZw&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=20b4e249dbf66142bf0105698f33292d&oe=5C4BB6E6)