பொறுத்தல்!

கனிவாய்ப் பொறுப்போம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:4.

4   அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:
எத்தனை முறை நாம் இறையிடம் சென்று,
என்னை மன்னியும் என்றோமே.
அத்தனை முறையும் அவரும் இரங்கி,
அனைத்தையும் நமக்குப் பொறுத்தாரே.
இத்தனை என்று எண்ணி முடியா,
மொத்தமும் நம்மிடம் இருக்கையிலே,
கத்துதல் நிறுத்தி, கடவுளை வணங்கி,

கனிவாய் உறவைப் பொறுப்பீரே!
ஆமென்.

Leave a Reply