பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:14.
14 போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
பொய்யாய்க் குற்றம் சாட்டாதீர்;
போதாதெனக் கை நீட்டாதீர்.
மெய்யாய்த் தீங்கு செய்யாதீர்.
மேன்மையாவீர், அய்யா நீர்!
உய்யாதிருப்பவர் வாங்குகிறார்;
உண்மை விட்டு நீங்குகிறார்.
அய்யா, அவர்போல் ஆளாதீர்;
அறிவற்றவராய் மாளாதீர்!
ஆமென்.
![Image may contain: 2 people, including Senthil Kumaran, people smiling, hat](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/38783102_1953262044704588_3338675437223018496_n.jpg?_nc_cat=0&oh=8c3a7c1e2309c17ce7782d802e49fc03&oe=5C097B1B)