பொய்மை எரியும்!
கிறித்துவின் வாக்கு:4:17-18.
17 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
18 வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
கிறித்துவில் வாழ்வு:
நெல்லுக்கு மட்டும் மழையைப் பொழிந்து,
நேர்மை என்கிற இறைவனில்லை.
புல்லுக்கும் கொடுத்து, களையும் வளர்க்கும்,
பொறுமைப் பண்பில் குறைவுமில்லை.
நல்லார் எனினும், அறுவடை நாளில்,
நல்மணி பிரிப்பார், தவறுமில்லை.
பொல்லாப்பழியும், பொய்மை எரியும்,
போக்குச் சொல்லவும் எவருமில்லை!
ஆமென்.
![Image may contain: one or more people, people standing, outdoor and nature](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/39040855_1959684074062385_8630804792119132160_n.jpg?_nc_cat=0&oh=f92da3790ee8056d78b5fc37691180af&oe=5BF29359)