பெற்றோர் சொற்படி நடத்தல்

பெற்றோர் விருப்பை மதித்து நடந்தால்….
நற்செய்தி மாலை மாற்கு 7:9-13.
“மேலும் அவர், ‘ உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள். ‘ உன் தந்தையையும் தாயையும் மதித்துநட ‘ என்றும் தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் ‘ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘ நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ″ கொர்பான் ″ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று ‘ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
பெற்றோர் சொற்படி பிள்ளை நடந்தால்,
பேரின்பமாகும் அவ்வீடு.
மற்றோர் கண்டு, அதனைத் தொடர்ந்தால்,
மகிழ்ச்சியில் நிறையும் நம் நாடு.
கற்றோர் வடிவில் வாழ்வோர் மறந்தால்,
காண்பார் பின்னர் பெரும்பாடு.
குற்றம் நீங்கும், குடும்பம் மகிழும்;
பெற்றோர் விருப்பை நீ நாடு!
ஆமென்.

Leave a Reply