பெரும் பேறு!

பெரும்பேறு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:27-28.

27அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.
28அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பெற்ற அன்னை மரியைவிடவும்,
பேறு பெற்றார் இல்லையென்று,
உற்று நோக்கிய ஒரு தாய் சொல்ல,
உண்டு மேலாம் பேறு என்றார்.
பற்று கொண்டு பணி செய்வார்தான்,
பாரில் மிகப்பெரும் பேறடைவார்.
கற்று நிற்கும் நீங்களும் நானும்,
காத்து நடந்தால், ஏறு என்பார்!
ஆமென்.

Leave a Reply