பெருங்கூட்டப் பேய்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:29-30.
29 அந்த அசுத்தஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி வெகுகாலமாய் அவனைப்பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப் போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
30 இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
கிறித்துவில் வாழ்வு:
பெருங்கூட்டப் பேய்களின்று,
பேதையரை ஆட்டிடுதே!
பொருளாவல் தூண்டிவிட்டுப்
பொய்க்காட்சி காட்டிடுதே!
வருங்காலம் எண்ணாரோ
வலைதனிலே மாட்டினரே.
அருள்கூரும் இறையரசே,
அடியாரை மீட்டிடுமே!
ஆமென்.
![Image may contain: one or more people](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/q82/s526x296/52518043_2228429950521128_5191838595769434112_n.jpg?_nc_cat=103&_nc_oc=AQn7wx1JtIyVQ8Wh4wE1YGJX4dvSFGtsqi0MLyFvwmUJ4fX9KLBBCarPehxJhJFNwqA&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=ac3a688af6df838a6db25ec2c9f467e0&oe=5CE3FBBF)