பெரியவர் எவருண்டு?
நற்செய்தி: யோவான் 4:12.
நல்வழி:
வீட்டில் பெரியோர் சிலருண்டு;
வெளியில் தெரிவோர் எவருண்டு?
நாட்டில் அறிவோர் பலருண்டு;
நன்மை புரிவோர் எவருண்டு?
தீட்டில் கிடப்போர் ஆங்குண்டு.
திருந்தி நடப்போர் எவருண்டு?
ஏட்டில் நடிப்பார் ஈங்குண்டு.
இறை பிடிப்பார் எவருண்டு?
ஆமென்.
-செல்லையா.