பெரியவர் எவருண்டு?

பெரியவர் எவருண்டு? 
நற்செய்தி: யோவான் 4:12.

நல்வழி: 


வீட்டில் பெரியோர் சிலருண்டு;

வெளியில் தெரிவோர் எவருண்டு?

நாட்டில் அறிவோர் பலருண்டு;

நன்மை புரிவோர் எவருண்டு?

தீட்டில் கிடப்போர் ஆங்குண்டு.

திருந்தி நடப்போர் எவருண்டு?

ஏட்டில் நடிப்பார் ஈங்குண்டு.

இறை பிடிப்பார் எவருண்டு?

ஆமென்.

-செல்லையா.

Leave a Reply