புளித்த மாவு போல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா13:20-21.
20மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? |
21அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார். கிறித்துவில் வாழ்வு: கொஞ்சம் புளித்த மாவைச் சேர்த்தால், குடுவை முழுதும் புளிக்கிறது. வஞ்சம் இல்லார் நம்மில் சேர்ந்தால், வாழ்வும் மகிழ்வால் களிக்கிறது. அஞ்சும் தீமை அரசுள் நுழைந்தால், அதுவே அனைத்தினை அழிக்கிறது. கெஞ்சும் நமக்கு அமைதி எங்கே? கிறித்து அரசே அளிக்கிறது! ஆமென். |