புகழ்வோம்!

இறைமகன்  போற்றும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 19:36-38.

36  அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.

37  அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,

38  கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

ஊரை விற்று உலகை வாங்கும்,

உண்மைக் காட்சி காணும் நாம்,

யாரைக் கொண்டு வந்தால் நீங்கும்,

எளியோர் வறுமை என்கின்றோம்.

பாரை மீட்கப் பரனை வாழ்த்தும்,

பண்பாளரைப் பார்க்கும் நாம்,

தாரை ஊதித் தமிழிலழைப்போம்;

தருவார் வாழ்வு, நன்கென்போம்!

ஆமென்.

Leave a Reply