பாழாக்கும் அருவருப்பு!
நற்செய்தி மாலை: மாற்கு 13:14-16.
“நடுங்க வைக்கும் தீட்டு’ நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம். வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.”
நற்செய்தி மலர்:
பாழாக்கும் அருவருப்பாய்,
பகைத் தலைவன் முன் நிற்க,
ஆழாக்கு உணவிற்காய்,
அடுப்படிக்குச் செல்லோமே!
கூழாக்கும் கன்மலையாய்,
கிறித்தரசர் பகையழிக்க,
வீழாத அடியவர்க்காய் ,
விருந்தளிப்பார், செல்வோமே!
ஆமென்.
![Image may contain: sky and outdoor](https://fb-s-d-a.akamaihd.net/h-ak-xpf1/v/t1.0-0/p526x296/15871614_1336198346410964_3170146192492429723_n.jpg?oh=d7de86c5dd2c30cbe4bed1a4f1b84929&oe=58DD003C&__gda__=1490846096_c9fdab85efdb89e4c9b4658463153cc5)