பாறையுள் தோண்டிக் கட்டியவர்!

பாறையுள் தோண்டிக் கட்டியவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:46-49.
46 என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?
47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குச் காண்பிப்பேன்.
48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
49 என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
நல்லார் பொல்லார் எனப்பார்த்து,
நாட்டில் வருமோ புயல்காற்று?
எல்லாரையும் அது தாக்கும்;
எனினும், நம்மை இறை காக்கும்.
பொல்லார் மணல்மேல் ஆள்கின்றார்;
புயலில் விழுந்து, மாள்கின்றார்.
இல்லார் இறைகீழ் தாழ்கின்றார்;
இதனால் நிலைத்து வாழ்கின்றார்.
ஆமென்.

Leave a Reply