பாறையில் விழுந்தவை!

பாறையில் விழுந்தவை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:13.
13 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக் காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
சொல்லை அழகாய்ப் பாடலாக்கிச்
சொன்னால், ஆமாம் என்றிடுவார்.
கல்லைக் காட்டும் நெஞ்சம் மறைத்துக்
கயமையின் கூட்டாய் நின்றிடுவார்.
இல்லை இவரில் நன்மை என்று,
எளியோர் வருந்திச் சென்றிடுவார்.
எல்லாம் அறிந்த இறைவன் ஒருநாள்,
யாவையும் பொடித்து வென்றிடுவார்!
ஆமென்.

Image may contain: outdoor
Like

Leave a Reply