பாறையில் விழுந்தவை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:13.
13 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக் காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
சொல்லை அழகாய்ப் பாடலாக்கிச்
சொன்னால், ஆமாம் என்றிடுவார்.
கல்லைக் காட்டும் நெஞ்சம் மறைத்துக்
கயமையின் கூட்டாய் நின்றிடுவார்.
இல்லை இவரில் நன்மை என்று,
எளியோர் வருந்திச் சென்றிடுவார்.
எல்லாம் அறிந்த இறைவன் ஒருநாள்,
யாவையும் பொடித்து வென்றிடுவார்!
ஆமென்.
![Image may contain: outdoor](https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/50337301_2176773182353472_5604641672253145088_n.jpg?_nc_cat=103&_nc_ht=scontent-maa2-1.xx&oh=4fe249012031af40e39da8045c250f41&oe=5CBA8E7A)