பாகுபாடு பாரா இறைவன்!

பாகுபாடு பாரா இறைவன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 8:4-8.
4 சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது, அவர் உவமையாகச் சொன்னது:
5 விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்துமிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
6 சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
7 சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
8 சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.

கிறித்துவில் வாழ்வு:
வெவ்வேறு நிலங்கள் பார்க்கச் சென்றோம்.
விரும்பாதவற்றை வேண்டாம் என்றோம்.
இவ்வாறு சிலபேர் செய்திட நின்றோம்;
இறையோ எங்கும் விதைப்பது கண்டோம்.
ஒவ்வோர் ஆளும் ஒவ்வொரு நிலமாம்.
ஒதுக்கி வைத்தல் இறையில் இலையாம்.
செவ்வனே விதைக்கச் செல்கிறார் வலமாம்;
செய்திப்படி நாம் செய்வதே நலமாம்!
ஆமென்.

Image may contain: one or more people, people standing, outdoor and nature
Like

Leave a Reply