பல்வலிப் பாடல்!
பற்கள் இருப்பது வலிக்கேயென்றால்,
பசியே என்னைத் தொடாதே!
புற்கள் நிறைந்தது வயலேயென்றால்,
புசிப்பது கண்ணில் படாதே!
சொற்கள் தருவது தீமையேயென்றால்,
சொந்தக் கருத்தைக் கொடாதே!
பிற்காலத்தில் அறுப்பதை நினைப்பாய்;
பிழைத்த வினைகள் விடாதே!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: text](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x296/43323006_2034205983276860_1614258510399275008_n.jpg?_nc_cat=102&oh=832f91b754b9183453b38638022511b5&oe=5C16FC1A)