பலியாடு பாரீர்!

பலியாடு பாரீர்!

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:7-9.  

7   பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.

8   அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்.

9   அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:  

அழிக்காது ஆண்டவர் கடக்க,  

ஆட்டை அடித்தார் அன்று.   

பலிக்கான ஆடாய்க் கொடுக்க,  

பரமன் வந்தார் இன்று.  

வலிக்காது நாமும் நடக்க,  

நம்மைக் கொடுப்பது என்று?  

விழிக்காது வீழ்தல் தடுக்க,  

வேண்டுவதுதான் நன்று!

ஆமென்.  

-செல்லையா.

Leave a Reply