பற்றால் நடப்போம்!

பற்றால் நடப்போம்!
நற்செய்தி: யோவான் 5:7-9.


7. அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9. உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.


நல்வழி:


எழுந்து இருக்க இயலான் கண்டு,

இறைமகன் என்ன கூறினார்?

அழுக்கு படுக்கை எடுத்துக் கொண்டு,

அவனிடம் நடக்கக் கூறினார்.

விழுந்து கிடக்கும் நம்மைக் கண்டு,

விண்மகன் என்ன கூறுவார்?

தொழுகிற நெஞ்சுள் பற்று கொண்டு,

துன்பம் கடக்கக் கூறுவார்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply