பரிவு!

விலங்கிற்குதவும் மனிதரே!

கிறித்துவின் வாக்கு:

லூக்கா 14:1-6.

1   ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
2   அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.3   இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.4   அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,5   அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.6   அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
விழுந்து விட்டது விலங்குயென்றால்,
விரைந்துதவப் பதறுகிறோம்.
எழுந்து வராதது தலைவருமென்றால்.
ஏங்கித் துடித்துக் கதறுகிறோம்.
அழுது மாள்வது எளியவராதலால்,
அக்கரையெடாது நழுவுகிறோம்.
பழுது என்பது உள்ளிருப்பதால்,
பரிவு வாக்கினால் கழுவுகிறோம்!
ஆமென்.

Leave a Reply