பட்ட மரமே!

பட்ட மரங்களே!   

கிறித்துவின் வாக்கு: லூக்கா 23:29-31.  

29  இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.

30  அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.

31  பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

பச்சை மரமே சாயும்போது,  

பட்டமரங்கள் என்னாகும்?  

மிச்ச மீதி இலாதுபோகும்,  

மீண்டும் தளிரா நிலை வரும்.  

கொச்சை என்று கூறிடவேண்டாம்.  

குறை திருத்தல் நலமாகும்.  

இச்சையால்தான் யாவும் அழியும்;

இறை வாக்கோ வாழ்வு தரும்!  

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.  

Leave a Reply