நேர்மை உமது தூணாகும்!

நேர்மை உமது தூணாகும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:12-13.
12 ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
13 அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:
அரசு வழங்கும் சம்பளம் யாவும்,
ஆண்டவர் அருளும் பேறாகும்.
அதற்கு அடியில் வாங்கும் எதுவும்,
அடித்துச் செல்லும் ஆறாகும்.
உரசி நோக்கி உண்மை தேடின்,
உமக்கு நேர்மை தூணாகும்.
ஊழல் செய்து ஊரை வாங்கின்,
உயரிய வாழ்வும் கூனாகும்!
ஆமென்.

Image may contain: one or more people and text
LikeShow More Reactions

Comment

Leave a Reply