நீடிய பொறுமை!

நீடிய பொறுமை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:16-19.  

16  பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.

17  என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.

18  ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.

19  உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

விலை மதிப்பில்லா மீட்பை வழங்கும்,  

விண்ணவர் என்னுடன் இருப்பதனால்,  

தலை மயிர்கூடத் தானாய் விழாது; 

தவறும் உறவினைப பொறுப்பேனே.   

கொலை வெறியோடு  எவர் வந்தாலும்,  

கொடுமை வீழும் என்பதனால்,  

நிலை தவறாது நிற்கும் வலுவை, 

நீடிய பொறுமையில் பெறுவேனே!  

ஆமென்.

Leave a Reply