நீடிய பொறுமை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:16-19.
16 பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.
17 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.
18 ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.
19 உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
விலை மதிப்பில்லா மீட்பை வழங்கும்,
விண்ணவர் என்னுடன் இருப்பதனால்,
தலை மயிர்கூடத் தானாய் விழாது;
தவறும் உறவினைப பொறுப்பேனே.
கொலை வெறியோடு எவர் வந்தாலும்,
கொடுமை வீழும் என்பதனால்,
நிலை தவறாது நிற்கும் வலுவை,
நீடிய பொறுமையில் பெறுவேனே!
ஆமென்.