நல்வழி ஒன்றே!

நல் வழி ஒன்றே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:41-42.

41 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

பல்வழி உண்டு என்று அலைந்தேன்;

பயனாய் எதுவும் கிட்டவில்லை.

சொல்வழி மறந்து நிலை குலைந்தேன்,

சொத்தும் பொருளும் ஒட்டவில்லை.

அல்வழி சென்று அறம் தொலைத்தேன்;

அதுவும் வாழ்வைக் கட்டவில்லை.

நல்வழி ஒன்றாம், இயேசுவில் மலைத்தேன்;

நடத்தும் அவரன்றித் திட்டமில்லை!

ஆமென்.

Leave a Reply