நலமாக்கும் நல்லவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:40.
40 சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
கிறித்துவில் வாழ்வு:
இரவானாலும் பகலானாலும்,
இயேசுவின் அண்டை வாருங்கள்.
மரமாய் வளர்ந்தும், கனிகளிலாத,
மலட்டை நினைவு கூருங்கள்.
கரத்தால் தொட்டு, பிணிகள் நீக்கும்,
கடவுளின் மகனைச் சேருங்கள்!
வரமாய்த் தந்த ஆவியின் அருளால்,
வழங்கும் நன்மையும் பாருங்கள்.
ஆமென்.
![Image may contain: 1 person, sitting and close-up](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p280x280/43278491_2029869053710553_8462388034837413888_n.jpg?_nc_cat=101&oh=adc2171c6d74a9a57cea9bfe0d789b3a&oe=5C4CC037)