நம்பிக்கையுள்ளோர் வாய் மூடார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:21-23.
21 ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
22 அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.
கிறித்துவில் வாழ்வு:
நம்பிக்கையுள்ளோர் வாய் மூடார்;
நற்செய்தியன்றி அவர் பாடார்.
கும்பிடும் கையில் பொருள் நாடார்;
கோடி கொடுப்பினும் பின் ஓடார்.
வம்பும் வாதும் இனி கேளார்;
வாய்மையற்றோர் முன் தாழார்.
அம்புகள்வரினும் அவர் மாளார்;
அவரை வெறுப்பவர்தான் வாழார்!
ஆமென்.
![Image may contain: text](https://fb-s-d-a.akamaihd.net/h-ak-fbx/v/t1.0-0/p526x296/19554482_1524707134226750_1091914270013983558_n.jpg?oh=9b84f71104cc6c6f9b128f355d666d8f&oe=5A0444A9&__gda__=1509932551_6161b47509bac427e038a1f54fc2a558)