நன்மை செய்வோம்!


நான்குபேர்க்கு நன்மை செய்யார்,

நல்லவராக இராரே.

ஏங்குவோர்க்கு இரங்காதிருப்பார்,

இயேசு பெயரைப் பெறாரே.

வாங்குவதில்தான் உலகோர் சிறப்பார்;

வழங்க மகிழ்ந்து வராரே.

தாங்குமிறையை நம்பி வாழ்வோம்;

தலை குனிவெதுவும் தராரே!


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply