தொண்டின் மறுபெயர் கிறித்து!

தொண்டின் மறுபெயர் கிறித்து!
நற்செய்தி மாலை: மாற்கு 10:43-45.
“ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்’ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
குண்டுகள் தோண்டி, குழிகள் பறிக்கும்,
கொடியோர் தலைவராம், அக்காலம்.
குண்டுகள் வீசி, கொளுத்திக் கொல்லும்,
கொடுமைத் தலைமையே, இக்காலம்.
தொண்டுகள் புரிந்து, தூய்மையில் நடந்து,
துயரைத் துடைப்பது எக்காலம்?
தொண்டின் மறுபெயர் கிறித்து என்று,
தெளிவாய்க் கண்டால், திருக்கோலம்!
ஆமென்.

Image may contain: 1 person

Leave a Reply