தொடருவேன் இறை நம்பிக்கையில்!

  • தொடருவேன் இறை நம்பிக்கையில்!
    நற்செய்தி மாலை:மாற்கு 10:38-40.
    “இயேசுவோ அவர்களிடம், ‘ நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ இயலும் ‘ என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ‘ நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும் ‘ என்று கூறினார்.”
    நற்செய்தி மலர்:
    அன்பின் ஊழியம் என்றாலும்,
    அடைகிறேன் ஆயிரம் துன்பங்கள்.
    பொன்பொருள் வெறுத்து நின்றாலும்,
    பொங்குதே துயரக் கிண்ணங்கள்.
    இன்று நான் மூழ்கிச் சென்றாலும்,
    எழுப்புவார் இயேசு தம் கைகளில்.
    துன்பமே வாழ்கையை வென்றாலும்,
    தொடருவேன் இறை நம்பிக்கையில்!
    ஆமென்.

    Image may contain: shoes, basketball court and one or more people

Leave a Reply