-
தொடருவேன் இறை நம்பிக்கையில்!
நற்செய்தி மாலை:மாற்கு 10:38-40.
“இயேசுவோ அவர்களிடம், ‘ நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ இயலும் ‘ என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ‘ நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும் ‘ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
அன்பின் ஊழியம் என்றாலும்,
அடைகிறேன் ஆயிரம் துன்பங்கள்.
பொன்பொருள் வெறுத்து நின்றாலும்,
பொங்குதே துயரக் கிண்ணங்கள்.
இன்று நான் மூழ்கிச் சென்றாலும்,
எழுப்புவார் இயேசு தம் கைகளில்.
துன்பமே வாழ்கையை வென்றாலும்,
தொடருவேன் இறை நம்பிக்கையில்!
ஆமென்.