தேர்தலும் நம் தேர்வும்!

திருமறையின்படி நாம் தேர்ந்தெடுக்கும் நமது ஆட்சியாளர்கள் அல்லது தலைவர்கள் எப்படி இருக்கவேண்டும்?

இறைவாக்கினன் தேர்தலும் நம் தேர்வும்!மோசேயால், கி.மு. 1410 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட உபாகமம் 17:14-20 – ஐ வாசித்து, நாமும் நம்மை ஆள, நமது ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வோம்.
1. நாம் தேர்ந்தெடுக்கும் நமது ஆட்சியாளர்கள், நல்லிறைவனால் தேர்வு பெறுபவர்கள்தானா என்று முதற்கண் எண்ணிப் பார்ப்போம். (18:15).
2. நம்மை ஆள வருபவர் நம் நாட்டைச் சார்ந்தவர்தானா? அயலவரைத் தேர்வு செய்யக் கூடாது என்று ஆண்டவரின் வாக்கு தெளிவாய் உரைக்கிறது. (18:15).
3. குற்றப் பின்னணியில் உள்ளவர்களைச் சேர்க்காதவர்கள், (அந்த நாள் கணக்கின்படி சண்டைக் குதிரைகள்.18:16), வேறு மனைவியரை-வேறு கணவரைத் தேடாதவர்கள் (18:17), மிகுதியாய்ச் சொத்து சேர்க்காதவர்கள்- அதாவது ஊழல் புரியாதவர்கள் (18:17) என்று பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.
4. நற்பண்புடன் வாழ நாள்தோறும் இறைவாக்கை வாசிப்பவராய், நமது தலைவர் இருக்கவேண்டும்(17:18-20).

இப்படிப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கவும், தேர்வுபெறவும், இறைவேண்டல் ஏறெடுப்போம்!
-கெர்சோம் செல்லையா.


Click here to Reply, Reply to all or Forw

Leave a Reply