திரும்பிப் பார்க்கிறார்!

திரும்பிப் பார்க்கிறார்!  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:61-62.  

61  அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,

62  வெளியே போய், மனங்கசந்து அழுதான்.  

கிறித்துவில் வாழ்வு:  

திரும்பிப் பார்த்த இயேசுவைக் கண்டு,  

திருந்தி அழுதார் பேதுரு.  

விரும்பிப் பார்க்கும் விண்ணோன் கண்டு,  

வேண்டிக் கேட்டால் புதுவுரு.  

அரும்பித் தோன்றி மலரும் முன்னே, 

அழியச் செய்யார் அழைப்பு. 

கரும்பின் சாறாய் கனி தருவோமே.   

கடவுளுக்கதுதான் உழைப்பு!  

ஆமென்.

Leave a Reply