தாழ்மை எங்கே?

தாழ்மை எங்கே?கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:7-11.
7 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:8 ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.9 அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.10 நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.11 தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
விண்ணெனத் தம்மை உயர்த்தியோரெங்கே?
வீழ்ந்து கிடக்கிறார் மண்ணாயிங்கே.
மண்ணெனத் தம்மைத் தாழ்த்தியோரெங்கே?
மாண்பில் உயர்கிறார் விண்ணாயங்கே.
கொண்டிடத் தாழ்மை பெறுமிடமெங்கே?
கோரக் குருசுமுன் வருவீரிங்கே.
அண்டம் அனைத்தும் படைத்தவரங்கே,
அடிமைவடிவில் தருகிறார் அன்பே!
ஆமென்.

Leave a Reply