தறிகெட்ட ஆடுகள்!
வெறியும் வெறுப்பும் பதுக்கி வைத்து,
வெளியே அன்பைக் கூறுகிறோம்.
நெறியும் பண்பும் ஒதுக்கி வைத்து,
நேர்மை உருபோல் மாறுகிறோம்.
குறி தவறாகும் வினையே செய்து,
குற்றங்களில்தான் தேறுகிறோம்.
தறிகெட்ட ஆடுகள், தவற்றில் விழுந்தோம்;
தாங்கும் இறையே, ஏறுகிறோம்!
-கெர்சோம் செல்லையா.
