தறிகெட்ட ஆடுகள்!
வெறியும் வெறுப்பும் பதுக்கி வைத்து,
வெளியே அன்பைக் கூறுகிறோம்.
நெறியும் பண்பும் ஒதுக்கி வைத்து,
நேர்மை உருபோல் மாறுகிறோம்.
குறி தவறாகும் வினையே செய்து,
குற்றங்களில்தான் தேறுகிறோம்.
தறிகெட்ட ஆடுகள், தவற்றில் விழுந்தோம்;
தாங்கும் இறையே, ஏறுகிறோம்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: one or more people and cat](https://fb-s-a-a.akamaihd.net/h-ak-xla1/v/t1.0-0/p235x350/17800393_1422316487799149_6335507830224201902_n.jpg?oh=717db50518b212d1ae372394a7004127&oe=594F0801&__gda__=1503003812_a9518841dc83675fd0a9e7e7d7df583d)