தனிமை தேடிய இயேசு!



10தனிமை தேடிய இயேசு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:10-11.
அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
11ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.

கிறித்துவில் வாழ்வு:
தனிமை விரும்பும் வேளையிலும்,
தவிக்கும் மக்கள் வருகின்றார்.
இனிமை வாழ்வு இவரடைய,
இயேசு இறை வாக்கருள்கின்றார்.
மனிதர், வாழ்வில் ஓய்வமைதி 
மாபெரும் பேறாய் அடைந்தாலும்,
புனிதர் வாக்கு உரைப்போர்க்கு,
புவியில் ஓய்வு கிடையாதே!
ஆமென்.

Leave a Reply