10தனிமை தேடிய இயேசு! கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:10-11. அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார். |
11ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார். கிறித்துவில் வாழ்வு: தனிமை விரும்பும் வேளையிலும், தவிக்கும் மக்கள் வருகின்றார். இனிமை வாழ்வு இவரடைய, இயேசு இறை வாக்கருள்கின்றார். மனிதர், வாழ்வில் ஓய்வமைதி மாபெரும் பேறாய் அடைந்தாலும், புனிதர் வாக்கு உரைப்போர்க்கு, புவியில் ஓய்வு கிடையாதே! ஆமென். |