தந்தையின் வலி!

மைந்தனைக் கொடுக்கும் தந்தை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 20: 13-16.  

13  அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.

14  தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,

15  அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்?

16  அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:

மைந்தனைக் கொடுத்த தந்தையின் நிலையை,

மறுபடி நெஞ்சில் நிறுத்திடுவோம். 

தந்தையின் வலியைத் தந்தைதான் அறிவார்;

தவறு களையத் திருத்திடுவோம். 

நிந்தனை, துன்பம் நெருக்கும்போது,

நேர்மையின் தந்தையை நினைத்திடுவோம். 

வந்ததை எல்லாம் அவரடி வைத்து, 

வாழ்வை அவருடன் இணைத்திடுவோம்! 

ஆமென்.

Leave a Reply