தடுக்கும் கல்!

இடற வைக்கும் கல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:1-2.

1   பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

2   அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.

கிறித்துவில் வாழ்வு:

ஒடுக்கப்பட்ட ஏழைகளை 

ஒன்றிற்குதவார் என்றெண்ணி,

தடுக்கல் இட்டுப் பின்தள்ளும்,

தவற்றின் உருவாம் மானிடரே,

எடுக்கும் அந்தப் பாறாங்கல்,

எந்திரக் கல்லாய் உம் கழுத்தில்,

அடுக்கப்பட்டு கடல் தள்ளும்,

அழிவை உணர்ந்தால், ஏனிடரே?

ஆமென்.

Leave a Reply