சொல்லும் வரைக்கும் படுக்காதீர்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:29-31.
” பேதுரு அவரிடம், ‘ எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன் ‘ என்றார். இயேசு அவரிடம், ‘ இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அவரோ, ‘ நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன் ‘ என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.”
நற்செய்தி மலர்:
உணர்ச்சிப் பெருக்கில் உரைப்பது எல்லாம்,
உண்மை என்றென எடுக்காதீர்.
மணக்கும் ஆவியர் திட்டம் என்றும்
மறைபொருள் விளக்கம் கொடுக்காதீர்.
இணக்கம் இல்லா முடிவும் வேண்டாம்;
இறையின் விருப்புள் தொடுக்காதீர்.
சுணக்கம் இல்லாச் சொல்லே போதும்;
சொல்லும் வரைக்கும் படுக்காதீர்!
ஆமென்.
![No automatic alt text available.](https://fb-s-d-a.akamaihd.net/h-ak-xlp1/v/t1.0-0/s480x480/16864108_1387607627936702_4379033770377708219_n.jpg?oh=4c4c1bda3e97fd415ac35d26531f5593&oe=5938A4F3&__gda__=1496017932_4c452f38f3131d4981e41116520243df)